நடிகை தீபாவின் ஐபோன் ஆதாரங்கள் அழிப்பு : நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம்!!

286

ஆந்திராவில்..

நடிகை தீபா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்த ஐ போன் மீட்கப்பட்டுள்ளதால், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா என விசாரணை நடந்து வருகின்றது.

ஆந்திரா சித்தூரை சேர்ந்தவர் தீபா (எ) பவுலின் ஜெசிகா (29). இவர், வாய்தா தமிழ் திரைப்படத்தில், கதா நாயகியாக நடித்தார். சினிமாவில் நடிப்பதற்காக , விருகம்பாக்கம், மல்லிகை அவின்யூ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 17ம் தேதி அன்று , வீட்டில் இருந்த தீபா தற்கொலை செய்துக்கொண்டார். கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தீபாவின் ஐ போன் மாயமாகி இருந்தது. அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களை கைப்பற்றியதில், அதில் எந்தவித துப்பும் துலங்கவில்லை.

ஐ போன் கால் ஹிஸ்ட்ரி எடுத்தபோது, தயாரிப்பாளர் சிராஜூதீனிடம் , சம்பவத்தன்று தீபா பேசியதும், பின் வாக்கு வாதம் முற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து, சிராஜூதினை விசாரிக்க திட்டமிட்டனர். தீபா கடைசியாக எழுதிய கடிதத்தில், ஒருவரை உயிராய் காதலித்தேன், காதல் கை கூடவில்லை .

அதனால் தற்கொலை செய்துக்கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், காரைக்குடியில் படவேலையில் இருப்பதாக கூறிய சிராஜூதின் வீடு வண்ணாரப்பேட்டையில் உள்ளது. அங்கு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இன்று வரை ஆஜராகவில்லை. அதன் மர்மம் என்ன என தெரியவில்லை.

இந்த நிலையில், மாயமான ஐ-போன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிராஜுதீன் , தீபாவுக்கு கொடுத்த காதல் பரிசு தான் அந்த ஐ-போன் , தற்போது அது போலீசார் கையில் உள்ளது. அதை ஆய்வு நடத்தியதாக தெரிகிறது. ஆனால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆறு நாட்கள் கழித்து, அந்த ஐ-போன் , ஆண் நண்பர் பிரபாகரனிடம் இருந்து மீட்கபப்ட்டுள்ளது. இவர் தான் தீபா தற்கொலை குறித்த தகவலை கோயம்பேடு போலீசாருக்கு தெரிவித்தார். அதன் பிறகு தான் ஐ போன் மாயமானது. ஆரம்பத்தில், தீபா இரு செல்போன்கள் பயன்படுத்தியதாக கருதினர்.

ஐ போன் விவகாரம் பிரபாகரன், சிராஜூதினுக்கும் மட்டும் தெரிந்த விஷயம். தீபா தற்கொலை செய்த இடத்தில் இருந்து, பிரபாகரன் ஐ போனை எடுத்து, சிராஜூதினுக்கு ஆதரவாக ஆதாரங்களை அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிராஜூதின் ஆஜராகாமல் டிமிக்கி தருவதால், தீபா தற்கொலை வழக்கில் நடப்பது அனைத்தும் மர்மமாக உள்ளது.