ஹெலிகாப்டரில் பறந்து சென்ற இதயம்.. 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 16 வயது சிறுமி!!

459

கர்நாடகாவில்..

மூளைச்சாவு அடைந்த 16 வயது சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் 9 பேருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார். கர்நாடகா மாநிலம், சோமனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமி பாய். இந்த தம்பதியின் மகள் ரக்ஷிதா. இவர் பசவனஹள்ளியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் ரக்ஷீதா கடந்த 18ம் தேதி கல்லூரிக்கு செல்வதற்காகப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது ஒட்டுநர் பேருந்தை இயக்கியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரக்ஷீதா மூளைச்சாவு அடைத்துள்ளார். இது குறித்து மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

பிறகு உடனே அவர்கள் தங்களது மகளின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து ரக்ஷிதாவின் உடலிலிருந்து கண், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் அகற்றப்பட்டது.

இதில் இதயம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9வயது சிறுவனுக்குப் பொருத்துவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு பொறுத்தப்பட்டுள்ளது. மற்ற உறுப்புகள் உடுப்பி மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த சிறுயின் உடல் உறுப்புதானம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் உடல் உறுப்புதானத்தில் அவசியத்தையும் அனைவருக்கும் எடுத்து கூறும் விதமாகவும் அமைந்துள்ளது.