முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

1423

முல்லைத்தீவு..

முல்லைத்தீவு தென்னியன்குளத்தில் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளமை கிராமத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்னியன்குளம் அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவன் நீண்டகால நோயினால் பதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த 6 மாதகாலமாக மகரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடந்த புலமை பரிசில் பரீட்சையில் 115 புள்ளிகளை பெற்று சிறப்பாக கல்வி கற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பு கிரமாத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது