ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

458

வேலம்பட்டியில்..

துறையூர் நெட்ட வேலம்பட்டியில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் லில்லியின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி டி.சியை கேட்ட பெற்றோர்கள்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 4 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.

அதை தொடர்ந்து அவரது இரப்பில் சந்தேகம் இருப்பதாகவும் ஆசிரியையின் தற்கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் நீதி விசாரணை வேண்டுமென்று பெற்றோர்கள் பள்ளிக்கு முன்பாக போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பாமல் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாற்று சான்றிதழ் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை லில்லியின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும்,

ஒரு நல்ல ஆசிரியர் மீது வேண்டுமென்றே பல புகார்கள் கொடுத்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்போது தற்கொலை செய்து கொள்ள வழிவகை செய்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்டோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

மேலும் இந்த பள்ளியில் தற்போது பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் ராஜசேகர் தொடர்ந்து பணியில் இருந்தால் தங்களது பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என்று திட்டவட்டமாக பெற்றோர்கள் கூறினார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெற்றோர்களிடம் முழுமையாக நடவடிக்கை எடுப்பதாக கூறி கூட்டத்தை கலைத்தனர்.