ஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை துப்பாக்கியால் சுட்ட மாணவன்!!

453

சீதாபூரில்..

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை திட்டியதால் அந்த சிறுவன் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த ஆசிரியரை பழிவாங்க முடிவெடுத்துள்ளான்.

திருட்டுத்தனமாக நாட்டுத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தெருவில் நடந்து சென்ற ஆசிரியரை நோக்கி சுட வேகமாக ஓடினான். அப்போது இதை கண்டு தப்ப முயன்ற ஆசிரியரை விடாமல் துரத்திச் சென்று துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளான்.

அதில் ஆசிரியர் காயமடைந்தார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் மாணவனை பிடித்தனர்.இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனினும் சிறுவன் அவர்களிடமிருந்து தப்பிவிட்டான். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.