ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் விழுந்த பல கோடிகள் : ஆனால் நிம்மதி, சந்தோஷம் பறிபோனதாக வேதனை!!

436

கேரளாவில்..

வெளிநாட்டிற்கு சமையல் வேலைக்கு செல்லவிருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் ரூ 25 கோடி பரிசு விழுந்த நிலையில் அதன் காரணமாக மன நிம்மதியை இழந்துள்ளேன் என கூறி அதிர வைத்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த அனூப். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். மலேசியாவுக்கு சமையல்காரராக செல்ல இருந்த அனூப்புக்கு கடந்த வாரம் ஓணம் லொட்டரியில் ரூ. 25 கோடி பரிசு விழுந்திருக்கிறது.

ஆனால் இப்போது அவருக்கு வேறு ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. லொட்டரியில் பரிசு விழுந்தது முதல், பலரும் கடன்கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அதனால் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார் அனூப்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், லாட்டரியில் பரிசு கிடைத்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது ஆனால் இப்பொது அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டது. தினமும் உதவிகேட்டு பலபேர் வருகிறார்கள். நான் இப்போது எனது சகோதரியின் வீட்டில் இருக்கிறேன். எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதனாலேயே இங்கு வந்திருக்கிறேன்.

ஆனால், இதையும் தெரிந்துகொண்டு இங்கேயும் ஆட்கள் வருகிறார்கள். இதை நான் பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டு கதவை தட்டுகிறார்கள். என்னுடைய குழந்தையை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.

எதற்காக இவ்வளவு பரிசு கிடைத்தது என இப்போது யோசிக்கிறேன். மூன்றாம் பரிசு கிடைத்தால் கூட நிம்மதியாக இருந்திருப்பேன். இன்னும் எனக்கு பணம் வந்துசேரவில்லை, என் நிலைமையை தயவு செய்து உணருங்கள் என கூறியுள்ளார்.