பல்கலைக்கழக மாணவனின் மரணத்தின் பின்னணியில் சிக்கிய கடிதம் : தாயார் வெளியிட்ட தகவல்!!

785


பல்கலைக்கழக மாணவன்..



பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.



பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் மகாவலி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில்,மாணவனின் சடலத்தை பெற்றோர் அடையாளம் காண்பித்திருந்தனர்.




24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற மாணவனின் கையடக்கத் தொலைபேசி கடந்த 16 ஆம் திகதி முதல் செயலிழக்க செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது பெற்றோர் பேராதனைக்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய கடிதமொன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், மாணவன் தங்கியிருந்த அறையில் கடிதம் ஒன்றும், அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் அவரது மூக்குக்கண்ணாடி என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதன்போது அறையிலிருந்து மீட்கப்பட்ட கடிதம் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. “என்னை மகாவலி ஆற்றுப்பகுதியில் சந்திக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, உயிரிழந்த மாணவனின் தாயார் தனது மகனின் மரணம் தொடர்பில் சில தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். ‘‘எனது மகன் சிறந்த அமைதியான சமூக நலன் கொண்டவர்.

இருப்பினும் பிரச்சினைக்கு தீர்வு மரணம் இல்லை. எனது மகன் கடந்த இரண்டு வாரகாலமாக கடும் மன உளைச்சலில் இருந்தார். அவர் பல்கலைக்கழகத்தில் ஒப்படையொன்றினை செய்யாமையினால் விரிவுரையாளரொருவர் மகனை கடுமையாக திட்டியுள்ளார்.

பின்னர் வகுப்பிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்குள்ளான மகன் இதனை தன்னால் தாங்க முடியவில்லையென சிலரிடம் கூறியுள்ளார். இதன் காரணமாகவே இவ்வாறு தவறான முடிவை எடுத்திருக்கலாம் என நினைக்கின்றேன்’’ எனவும் தாயார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறப்பதற்கு முன்னர் 7 மணியளவில் அவரது தாயார் மகனுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அம்மா எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது என இறுதியாக தெரிவித்ததாக தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவனுக்கு உளவியல்துறை தொடர்பான விரிவுரைகளை வழங்கும் விரிவுரையாளரொருவர் “அஞ்சன குலதுங்க எனது சிறந்த மாணவன்.

நிறைய பேரின் பிரச்சினைகளுக்கு தீர்வினையும், பல ஆலோசனைகளையும் கூறிய நீங்கள் உங்களது பிரச்சினையை பகிர்ந்து கொள்ள ஒருவரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.