விளையாட்டால் வந்த வினை : சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

349

சென்னையில்..

சென்னை புழல் அடுத்த காமராஜர் நகர் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் இளையமகன் கார்த்திக் (வயது 11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் இரவு கார்த்திக்கும் அவரது அண்ணனும் இணைந்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது தூக்குபோட்டு விளையாடுவது போல் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு விளையாடிய போது அவரது அண்ணன் வெளியே நின்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார்த்திக் தூக்கு கயிறில் சிக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.

பின்னர் இதனைக்கண்ட அவரது அண்ணன் அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் வந்து போலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். அதன் படி அங்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.