ஜார்க்கண்ட்டில்..
ஜார்க்கண்ட் மாநிலம் ஹல்டியா கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் அதே பகுதிய சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இதனிடையே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.
இதனால், அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் காதலனை வற்புறுத்தி வந்தார். ஆனால், அந்த இளைஞர் கர்ப்பிணி காதலியை திருமணம் செய்யாமல் காரணம் கூறி மழுப்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு அப்பெண் காதலனை சந்தித்து பேசியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த காதலன் கர்ப்பிணி என்றும் பாராமல் அடித்து கொன்றுள்ளார்.
பின்னர் அந்த இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.