ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

495

புதுச்சேரியில்..

புதுச்சேரி வினோபா நகர் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் 2-வது மனைவி லட்சுமி என்ற வள்ளியம்மை (32). இவர் கொக்கு பார்க் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி மேட்டுப்பாளையம் பகுதியில் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் மதிவாணனுக்கு 2-வது மனைவி லட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே மதிவாணன், லட்சுமிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த மதிவாணன் வீட்டில் இருந்த மரக்கட்டையால் லட்சுமியை தலையில் பலமாக அடித்தார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் பயந்துபோன மதிவாணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய மதிவாணனை கைது செய்தனர்.