சிதம்பரத்தில் குண்டு வெடிப்பு : மர்ம நபர்களுக்கு வலை வீச்சு!!

608

Blast

சென்னையை அடுத்து தமிழகத்தின் சிதம்பரத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் சிதம்பரம் மாரியப்பன் நகர் 2வது குறுக்குத்தெருவை சேர்ந்த விரிவுரையாளர் பன்னீர்செல்வம் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

என்ஜினீயரிங் டெக்னிஷீயன் அருள் அங்கு வாடகைக்கு தங்கியுள்ளார். அவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர்.
இன்று அருள் என்பவரின் அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில், அருள் படுகாயமுற்றார்.

அவரை மூன்று பேர் முச்சக்கர வண்டியில் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஓடிவிட்டனர். அந்த மர்ம நபர்கள் குறித்தும், குண்டுவெடிப்பு குறித்தும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.