கனடாவில் காணாமல் போன தமிழ் சிறுமி : பொலிஸார் அவசர கோரிக்கை!!

528

அஞ்சன்னா சக்திவடிவேல்..

கனடாவில் காணாமல் போன 15 வயதான தமிழ் சிறுமி தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். இதன்படி, குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடன் தொடர்புகொள்ளுமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட சுருள் கறுப்பு முடி, பழுப்பு நிற கண்கள், கருப்பு நிற பேன்ட் மற்றும் கருப்பு நைக் ஷூவுடன் சாம்பல் நிற ஹூடி அணிந்து கடைசியாக காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யோர்க் பிராந்திய காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.