குழந்தைக்கும் எனக்கும் நீதான் துரோகம் பண்ணுன… சீரியல் நடிகை வீடியோவை வெளியிட்ட கணவர்!!

475

நடிகை திவ்யா..

கேளடி கண்மணி சிரீயல் நடிகை திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் தன் கணவர் அடித்து உதைத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது சின்னத்திரையில் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் சீரியல் நடிகர் அர்னவ் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு இருவர் 5 வருடங்களாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வந்து வந்தனர்.

பின் அர்னவ் விருப்பத்தின் பேரில் முஸ்லின் முறைப்படியும் இந்து முறைப்படியும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த திவ்யாவை மிரட்டியுள்ளார் அர்னவ். இதனிடையில் அர்னவ் சக நடிகையுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு ஷாக்காகி என்ன இது என்று கேட்டுள்ளார் திவ்யா.

தற்போது தன் கணவருடன் அப்பார்ட்மெண்ட்டில் சண்டபோட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் பைத்தியம் பிடித்தது போல் திவ்யா அர்னவிடம் சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.