படுக்கையறையில் சடலமாக தொங்கிய கணவன், மனைவி : சிக்கிய உருக்கமான கடிதம்!!

540

ஓசூரில்..

ஒசூர் அருகே கடன் பிரச்சினையால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் கொழும்பு ஸ்டோர் என்னும் மளிகை கடையை நடத்தி வந்தார் சிவக்குமார் (49).

இவருக்கு கிருஷ்ணவேணி என்கிற மனைவியும் ராஜதர்சினி (7),ஷிவானி (5) என்கிற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.சிவக்குமார் கடன் பிரச்சனையில் சிக்கி மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை சிவக்குமார் படுக்கை அறையிலிருந்து வெளியே வரவில்லை. அவரது மனைவி கிருஷ்ணவேனியும் வராமல் கதவு உள் தாழிடப்பட்டிருந்ததால் அவர்களது பிள்ளைகள் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தனர்.

அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் வந்தனர். அவர்கள் படுக்கையறையை உடைத்து பார்த்தபோது இரண்டு மின்விசிறிகளில் தனித்தனியாக இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது.

பெற்றோர் சடலமாக தொங்குவதை பார்த்த பிள்ளைகள் இருவரும் கதறி துடித்து அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

இதனை அடுத்து கணவன் – மனைவி சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.