சட்டவிரோதமாக குழந்தை பெற்றாரா நயன்தாரா? சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் பதிவு!!

381

சினிமாவில்..

திருமணமாகி நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்த விக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு டுவிட்டர் பக்கத்தில் சோக் கொடுத்துள்ளார் நடிகை கஸ்துாரி. இவரது பதிவு தற்போது பலரை யோசிக்க வைத்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் காதலித்து வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிகள் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இதற்கு சினிமா வட்டாரங்கள் உள்ளிட்டு முழு உலகத்திலுள்ள நயன் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். சமீபக்காலமாக இவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள போவதாக பதிவுகளை பதிவிட்டு அதனை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

இதன்படி தற்போது இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த குழந்தைகள் வாடகை தாயின் மூலம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நடிகையும் சட்டதரணியுமான கஸ்துாரி, இது தொடர்பான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். பதிவில், “மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், நயனுக்கு ஏதும் நோய் இருக்கிறதா? மற்றும் நயன்தாரா தடையை மீறி குழந்தை பெற்றுக்கொண்டாரா? என்று கேள்வியெழுப்பி வருகின்றனர்.