வவுனியாவில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் பெய்து வந்த மழை நேற்று மதியத்தில் இருந்து தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனால் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படுவதனால் மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில், தொடர்ச்சியான மழையினால் தாள் நிலங்களில் குடியிருப்பவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை சிறிய குளங்கள் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன் பல குளங்கள் வான் பாய்வதாகவும் பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் மழையினால் மக்கள் தமது அன்றாட வேலைகளைச் செய்யமுடியாது பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
-பாஸ்கரன் கதீசன், பண்டிதர்-