வேலைக்காரனால் ஏமார்ந்து கதறும் நடிகை பார்வதி நாயர்!!

453

பார்வதி..

நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்ற வேலைக்காரர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வதி நாயர் பிரபலமான மாடல் மற்றும் நடிகையுமாவார். மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த இவர் அபுதாபியில் பிறந்தவர்.

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரியான பார்வதி நாயர் மிஸ் கர்நாடகா, குயின் கேரளா போன்ற பல விருதுகளை வென்றுள்ளார். மாடல் துறையில் பிரபலமாகி பின்னர் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

பார்வதி நாயர் முதன்முதலில் 2017 இல் மலையாளத்தில் வெளியான பாபின்ஸ் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வரும் இவர் சென்னை நுங்கம்பாக்கம், ஸிடெர்லிங் சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பினார். அப்போது, அவர் வீட்டில் வேலை பார்க்கும் சுபாஷ் சந்திரபோஸ் (30) என்பவர் மாயமாகி இருந்தார்.

செல்போனில் அவரை தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் குழப்பத்தில் இருந்த பார்வதி நாயர் வீட்டுக்குள் அலசியபோது வீட்டின் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பார்வதி நாயர் வீட்டின் அறையை சோதனை செய்தார்.

அப்போது, வைரம் பதிக்கப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம் , மடிக்கணினி, மொபைல்போன் ஆகியவை திருடுப்போயிருந்தது தெரிய வந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் சுபாஷ் சந்திரபோஸ் மீது சந்தேகமடைந்த பவித்ரா நாயர் , நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் வாரம் இரு நாட்கள் மட்டும் தான் நடிகை வீட்டில் வேலை செய்வாராம். மற்ற நாட்களில், தயாரிப்பாளர் ஒருவரிடம் வேலைக்கு செல்வாராம். தற்போது அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.