தீபாவளி தின மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

444

மின்வெட்டு தொடர்பில்

தீபாவளி தினத்தன்று மின்தடையை நடைமுறைப்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று மற்றும் நாளை இதேவேளை, இன்று மற்றும் நாளைய தினங்களுக்கான மின் தடை அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று மாலை அறிவித்தார்.

இதன்படி, இன்று மற்றும் நாளை A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.