மகளின் சமாதி அருகே அவரின் காதலனுக்கும் சமாதி கட்டிய தந்தை : நடந்த விபரீதம்!!

1140

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம், துவாரகா பகுதியை அடுத்த லெட்சுமிபுரம் என்னும் இடத்தை சேர்ந்தவர் பவன் கல்யாண் (வயது 24). இவரும், கொடுங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த மரிது ஷியாமளா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ஓரே இடத்தில் படித்ததால் பவன் கல்யாண் மற்றும் ஷியாமளா ஆகியோர் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக பவன் கல்யாண் மற்றும் ஷியாமளா ஆகியோர், தங்களின் காதலை வீட்டில் சொல்லவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், இருவரது வீட்டிலும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, காதலர்கள் இருவரும் மனமுடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், கல்லூரி படிப்பை தொடரவும் அவர்களின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனையடுத்து, காதல் கைகூடாத காரணத்தினால் விபரீத முடிவை எடுத்த இளம்பெண் ஷியாமளா, சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.

மகளின் மறைவால், ஷியாமளாவின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் துயரத்தில் இருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ஷியாமளாவின் தந்தை நாகேஸ்வர ராவ் சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மகளின் காதலரான பவன் கல்யாணை கொலை செய்யவும் நாகேஸ்வர ராவ் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் நண்பர்களுடன் இருந்த பவன் கல்யாண் திடீரென காணாமலும் போயுள்ளார். அப்படி இருக்கையில், மகன் காணாமல் போனது பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் பவன் கல்யாண் பெற்றோர்கள் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் போலீசாரும் தேடி வந்துள்ள நிலையில், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

பவன் கல்யாணை கொலை செய்த நாகேஸ்வர ராவ், அவரை மகள் ஷியாமளாவின் சமாதிக்கு அருகில் புதைத்து சமாதி கட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை வாக்குமூலமாவும் நாகேஸ்வர ராவ் கொடுத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர், பவன் கல்யாண் உடலையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மகள் விபரீத முடிவை எடுத்ததால் மீளா துயரில் இருந்த தந்தை காதலனை பழி வாங்கிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.