உலகின் முதல் ஒரினச்சேர்க்கை தம்பதியினர்கள் 4 வருட வாழ்க்கைக்கு பின் தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த மார்க் ஆன்ரியோ மற்றும் பிஷப் ரொபின்சன் ஆகிய ஆண்மகன்கள் இருவரும் கடந்த 2010ம் ஆண்டு, ஒரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்டப்படி அங்கீகாரம் அளித்தபின் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தற்போது விவாகரத்து செய்வதாக கூறி ரொபின்சன், ஆன்ரியோவிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ரொபின்சன் கூறுகையில், விவாகரத்திற்கு காரணம் தனிப்பட்ட முடிவு என்றும் இதில் எங்கள் இருவருக்கு மட்டுமே பங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரொபின்சன் ஓரினச்சேர்க்கை உரிமைகளுக்கு ஒரு எடுத்துகாட்டாகவும், அடையாளமாகவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.