தென்கொரியாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி!!

460

மொஹமட் ஜின்னாத்..

தென்கொரியாவில் ஹெலோவீன் திருவிழாவின் போது இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த கண்டியை சேர்ந்த 27 வயதுடைய மொஹமட் ஜின்னாத்தின் ஜனாசாவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஹெலோவீன் கொண்டாடத்தின் சன நெரிசலில் சிக்குண்டு, 19 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 153 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதோடு, 149 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 33 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தென்கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.