லொட்டரியில்..
கனடா லொட்டரியில் 10 பேர் கொண்ட குழுவினருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் அதில் ஒரு அதிர்ஷ்டசாலி தமிழர் என தெரியவந்துள்ளது. ஒன்றாறியோவை சேர்ந்தவர் அவாடிஸ் ஜம்ஜியான்.
இவர் தலைமையிலான 10 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் லொட்டரி விளையாட்டில் சேர்ந்து ஈடுபடுவதை கடந்த 4 ஆண்டுகளாக வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு மேக்ஸ் மில்லியன்ஸ் லொட்டரி பரிசாக $500,000 (இலங்கை மதிப்பில் ரூ. 13,54,02,969.50) விழுந்துள்ளது. இந்த பத்து பேர் கொண்ட குழுவில் Mississauga-வை சேர்ந்த சந்திரௌதயன் செல்லத்துரை (Chandrauthayan Sellathurai) என் தமிழரும் இடம்பிடித்துள்ளார்.
இதன்மூலம் பெரிய தொகை அவருக்கும் கிடைத்துள்ளது. பரிசு பணத்தை வைத்து குடும்பத்தாருடன் கியூபாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவாடிஸ் கூறியுள்ள நிலையில் மற்றவர்கள் தங்கள் வெற்றிகளின் பங்கில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பதை இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை.