பாம்பை கடித்தே கொன்ற வினோத சிறுவன்.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

375

சத்தீஸ்கரில்..

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஜாஷ்பூர் மலைவாழ் பகுதி.இங்கு பழங்குடியின மக்கள் தான் அதிக அளவி வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் மிகமிக அதிகம். இப்பகுதிக்கு நாகலோகம் என்ற பெயருமுண்டு. இந்த மாவட்டத்தில் பாம்பு கடித்தால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையும் இந்த மக்களிடையே அதிகம்.

சத்தீஸ்கரில் காணப்படும் 80 சதவீத பாம்பு இனங்கள் ஜாஷ்பூரில் தான் வசிக்கின்றன. ஜாஷ்பூரில் அதிகமாக காணப்படும் 26 வகையான பாம்புகளில் 6 இனங்கள் மட்டுமே மிகுந்த விஷம் கொண்டவை.

மீதமுள்ள 20 இனங்கள் விஷமற்றவை. ஜாஷ்பூரில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 35 பேர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளனர். 2017ல் 16 பேரும், 2018ல் 6 பேரும், 2019ல் 12 பேரும் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில் ஜாஷ்பூர் மாவட்டம் பந்தர்பாத் கிராமத்தில் தீபக் என்ற 12 வயது சிறுவன் வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நாகப்பாம்பு ஒன்று சிறுவனை கடித்தது. உடனே அந்த சிறுவன் தன்னை கடித்த அந்த நாகப்பாம்பை வளைத்துப் பிடித்து தனது கையில் சுற்றிக் கொண்டு அந்த பாம்பை கடித்துள்ளான்.

அந்த நாகப்பாம்பு துடிதுடித்து உயிரிழந்து விட்டது. அதே நேரத்தில் அந்த சிறுவனுக்கு பாம்பு கடித்து எதுவும் ஆகவில்லை என்பதே ஆச்சர்யம். அந்த சிறுவனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது பாம்பை சிறுவன் கடித்தான் என்பதை கேட்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சிறுவனுக்கு பாம்பு விஷம் முறிவு ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் ஒரு நாள் முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டான். அவன் உடல் ஆரோக்கியமாக இயங்குவதை உறுதி செய்த பிறகு அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அந்த சிறுவன் கூறுகையில், “பாம்பு என் கையை கடித்தது. நான் மிகுந்த வலி வேதனையில் இருந்தேன். இதனால் என்னை கடித்த அந்த பாம்பை வளைத்துப் பிடித்து கையில் சுற்றிக்கொண்டு இரண்டு முறை கடித்தேன். எல்லாமே ஒரே நொடியில் நடந்து முடிந்து விட்டது, “எனக் கூறியுள்ளார்.

பாம்பு கடித்தபோது விஷம் சிறுவனின் உடலில் பரவததால் விரைவாக குணமடைந்தார், ஆனால் விஷம் இதுவரை வெளியேறவில்லை. இத்தகைய பாம்புக்கடிகள் வலிமிகுந்தவை என பாம்பு நிபுணர் கைசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.