மே முதல் நாளை இனி சுவாதி தினமாக கடைபிடிக்க தென்னக ரயில்வே முடிவு!!

349


Swathiசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 1ம் திகதி நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் பலியான சுவாதிக்கு தென்னக ரெயில்வே துறையின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா, சுவாதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசுகையில், இனி வரும் ஒவ்வொரு மே மாதத்தின் முதல் வேலை நாளை தென்னக ரெயில்வே சுவாதி தினமாக அனுசரிக்கும்.



அந்த சுவாதி நாளில் பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், எப்போதும் தயார்நிலையில் இருக்கும்படி எங்களை மறு அர்ப்பணம் செய்து கொள்ளவும் உறுதிமொழி ஏற்போம். மேலும், பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வினை பயணிகளுக்கும் எடுத்துரைப்போம் என்று தெரிவித்துள்ளார்.