பெற்ற தந்தையை குத்திக் கொன்று உடலை கால்வாயில் வீசிய மகள்!!

280

Mur

டெல்லி மேற்கு பகுதியில் மகளே நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொன்று கால்வாயில் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கியாலா பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் சில தினங்களுக்கு முன்பு பலத்த காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்டு ஒரு ஆண் பிணம் கிடந்துள்ளது. இதனையடுத்து, பொலிசார் அவர் யார் என்று விசாரித்து கொலையாளிகளையும் கைது செய்துள்ளனர்.

மேலும் விசாரணையில் அவரது மகளே, 2 ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
பிணமாக கிடந்தவரின் பெயர் தல்ஜித்சிங், அவரது 23 வயது மகள் குல்விந்தர் கவுர், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றித் திரிந்ததை அவர் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குல்விந்தர் கவுர், பிரின்ஸ் சந்து மற்றும் அசோக் சர்மா ஆகிய இரு நண்பர்களுடன் சேர்ந்து, தந்தையை கிரிக்கெட் ஸ்டம்பால் சரமாரியாக அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அவர் இறந்து விட்டதை உறுதி செய்ய தல்ஜித்சிங்கின் மார்பை கண்ணாடியால் கிழித்து, உள்ளே பொருத்தப்பட்டு இருந்த பேஸ்மேக்கர் கருவியை அகற்றி பார்த்துள்ளனர். பின்னர் அவரது உடலை கட்டி காரில் ஏற்றிச் சென்று கால்வாயில் வீசியுள்ளனர்.