கார் விபத்து : ஐவர் வைத்தியசாலையில்!!

825

விபத்து..

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் கார் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து சம்பவம் இன்று (05.11.2022) காலை நேர்ந்துள்ளது.

விபத்தில் சாரதி உட்பட 5 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு- மஹரகம பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.