தமிழ் பாடசாலையில் ஏற்பட்ட மோதல் : பரிதாபமாக உயிரிழந்த 13 வயது மாணவன்!!

1086

அம்பாறை..

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் ஏற்பட்ட மோதலில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. தம்பிலுவில் ஏ.பி.சி வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிவபாலன் கிசாஷாந் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்த மாணவன் மற்றொரு மாணவனை தாக்கியுள்ளார். இதனையடுத்து உயிரிழந்த மாணவனை தாக்குதலுக்குள்ளான மாணவன் திருப்பி தாக்கியதில் அவன் இரு மேசைக்களுக்கிடையே வீழ்ந்து வாயால் நுரை தள்ள கிடந்துள்ளார்.

இந்நிலையிலேயே மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் சக மாணவனை தாக்கிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை அந்தபகுதி மக்கள் வைத்தியசாலையில் திரண்டுள்ளதுடன், பெரும் சோகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.