4 வதும் பெண்ணாக பிறந்ததால் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

417


இந்தியாவில்..



இந்தியாவில் இன்னும் பல பகுதிகளில் பெண் சிசுக் கொலைகள் தொடர்ந்து வருகின்றன. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களிலும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது.



பெண்கள் என்னதான் சாதனைபுரிந்தாலும், பெற்றவர்களை கடைசி காலத்தில் கவனித்துக் கொண்டாலும் பெண் என்றாலே செலவு தான் என்ற மனோபாவம் தொடர்ந்து வருகிறது. ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு துறையில் பெண்கள் இமாலய சாதனைகளை புரிந்து வருகின்றனர்.




கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனவாசப்பூர் தாலுகா ஷெட்டிஹள்ளி கிராமத்தில் லோகேஷ் என்ற விவசாயி வசித்து வந்தார். இவரது மனைவி மஞ்சம்மா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இந்த நிலையில் மஞ்சம்மாவுக்கு நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் மீண்டும் 4வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த முறையாவது ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த லோகேஷ் விரக்தியடைந்தார்.


மனைவியை மருத்துவமனையில் பார்த்துவிட்டு லோகேஷ் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். மகள்கள் தந்தை தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்து காண்பித்தனர். அதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்றனர்.

சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லோகேஷின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் அவர் 4வதும் பெண் குழந்தை பிறந்ததால் அவர்களை எப்படி கரைசேர்க்க முடியும் என்ற துக்கத்தில்,


தனது தற்கொலை முடிவுக்கு தான்தான் காரணம் என்று எழுதியிருந்தார்.ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு 4 பெண் குழந்தைகளையும், மனைவியையும் நிர்க்கதியாக தவிக்கவிட்டு சென்ற லோகேஷால் அப்பகுதியில் சோகம் நிலவியுள்ளது.