மத சட்டத்தை மீறிய பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு!!

305

Ladyஇந்தோனேஷியாவில் முறையற்ற வகையில் 40 வயது திருமணமான ஆணுடன் தொடர்பு வைத்ததற்காக அந்தப்பெண் 5பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சவுக்கடி வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான அசேவின் பண்டா அசே நகரில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விதவை. இவர் 40 வயது நபர் ஒருவருடன் தவறான தொடர்பு வைத்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே பலமுறை பாலியல் தொடர்பு நீடித்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று இளம்பெண்ணின் வீட்டில் கொள்ளை கும்பல் ஒன்று கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தது. அங்கே, இளம்பெண்ணுடன் அந்த நபரும் இருந்துள்ளார்.

தவறான தொடர்பு வைத்துள்ளதாக அந்த ஜோடி மீது குற்றம்சாட்டிய அந்த கும்பல் அந்நபரை கட்டி வைத்து அடித்தது. அதேவேளையில் அந்த கும்பல் இளம்பெண்ணை மீண்டும் மீண்டும் கற்பழித்துள்ளது.

அதன்பின்பு வாளி ஒன்றில் சாக்கடை கழிவுகளை எடுத்து வந்து அவர்கள் இருவர் மீதும் அந்த கும்பல் ஊற்றியுள்ளது. பின்னர், அந்த கும்பல், திருமணமான நபருடன் முறையற்ற வகையில் தொடர்பு வைத்தது அந்நாட்டின் ஷரியா சட்டப்படி குற்றம் என கூறி, இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொலிசாரின் விசாரணையின்போது இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் வெளியானது.

இதனை தொடர்ந்து கும்பலில் இருந்த 3 பேரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர். மற்ற 5 பேர் தப்பி ஓடி விட்டனர். மேலும் சட்டத்தை மீறியதற்காக, இளம்பெண்ணுக்கு தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து லங்சா நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஷரியா அலுவலகத்தின் தலைவர் இப்ராகிம் லத்தீப் கூறுகையில், பாலியல் தொடர்பு வைத்து மத சட்டத்தை மீறிய இளம்பெண் மற்றும் அந்த நபர் என இருவருக்கும் பொது இடத்தில் வைத்து சவுக்கடி வழங்கும் தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

மதம் தொடர்பான குற்றத்தை செய்துள்ளதால், அந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டு உள்ளதை கருத்தில் எடுத்து கொண்டு தண்டனையில் இருந்து விடுவித்து விட முடியாது.

மேலும் அந்த நபருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். திருமணமான அந்நபர் இளம்பெண்ணுடன் இதற்கு முன்பு பல முறை செக்ஸ் தொடர்பு வைத்து இருந்துள்ளார் என விசாரணையில் இருவரும் ஒப்பு கொண்டுள்ளனர். எனவே, மத சட்டத்தின்படி, இளம்பெண் மற்றும் 40 வயது நபருக்கு தலா 9 சவுக்கடிகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.