சல்மான் கானுக்கு எதிராக நால்வர் சாட்சியம் : 10 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பு!!

268

SAlman

மும்பையில் மது போதையில் காரை ஓட்டிச் சென்று ஒருவரை ஏற்றி கொன்றதாக நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக 3 பேர் நேற்று சாட்சியம் அளித்தனர்.

கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் திகதி அதிகாலை சல்மான் கான் ஓட்டிச் சென்ற டொயோட்டா லாண்ட் குரூசர் கார் பாந்த்ராவில் அமெரிக்கன் பேக்கரி அருகில் இருக்கும் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் பலியானார்.

4 பேர் காயம் அடைந்தனர். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால், காரில் இருந்த சல்மான் கானின் பாதுகாப்பு பொலிஸ்காரர் அளித்த சாட்சியத்தில், விபத்து நடந்தபோது சல்மான் கான் அதிகளவில் மது குடித்திருந்தார்.

காரை ஓட்ட வேண்டாம் என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் என்று கூறினார். அவர் இப்போது இறந்து விட்டார்.

இந்த சாட்சியத்தின் காரணமாக, சல்மான் கான் மீது கொலைக்கு நிகரான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும், நீதவான் நீதிமன்றத்தில் இருந்து செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த புதிய குற்றச்சாட்டை எதிர்த்து சல்மான் கான் தாக்கல் செய்த மனுக்களை முதலில் மும்பை உயர் நீதிமன்றும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்தன.

இதைத் தொடர்ந்து, செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29ம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது வழக்கின் முதல் சாட்சியாக சாம்பா கவுடா என்பவர் சாட்சியம் அளித்தார். நேற்று, சல்மான் கான் ஆஜரானார்.

இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பேக்கரி தொழிலாளர்கள் மன்னு கான், முகமது கலீம் இக்பால் பட்டான், முஸ்லிம் ஷேக் ஆகிய மூவரும் நீதிபதி தேஷ்பாண்டே முன்னிலையில் சல்மான் கானை அடையாளம் காட்டினர்.

சல்மான் கான்தான் காரை ஓட்டியதாகவும், விபத்து நடந்ததும் டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கி ஓடினார் என்றும், அப்போது அவர் அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் ஓடும் போது கீழே விழுந்துவிட்டதாக சாட்சிகளில் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சல்மானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.