திருமணம் முடிந்து சில மணிநேரங்களில் உயிரை விட்ட மணமகன் : கதறித் துடித்த மனைவி!!

8435


தாம்பரத்தில்..



சென்னை தாம்பரத்தில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இவர் புதுச்சேரி கோட்டக்குப்பம் பகுதியில் வசித்து வரும் கோமதியை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்.



இவர்களது திருமணம் புதுச்சேரியில் நேற்று காலை கோட்டக்குப்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடத்தப்பட்டது. நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு கல்யாண வீட்டார் அனைவரும் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.




இந்நிலையில் உடை மாற்றும் அறைக்கு உடைகளை மாற்ற சென்ற சுரேஷ்குமார் நீண்ட நேரம் கடந்தும் வெளியே வரவில்லை. அவருடைய உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்தனர்.


அப்போது தரையில் சுரேஷ்குமார் மயங்கி விழுந்து கிடந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


திருமணமான அதே நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.