ஒருதலைக் காதலால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

400

இந்தியாவில்..

கேரள மாநிலம் ஆம்பூரி போஸ்ட் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20) என்ற இளம்பெண். இவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ரெஸ்டாரண்டில் மூன்று மாதத்திற்கு முன் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடித்துவிட்டு அபுபேலஸ் ரெஸ்டாரன்ட் பின்புறம் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின் கோபத்தில் தான் வைத்திருந்த மதுபான பாட்டிலால் அந்த பெண்ணின் முகத்தில் அடித்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த அந்த பெண் சாலையில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.

பின்பு அந்த இளைஞர் மதுபான பாட்டிலை உடைத்து முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். மேலும், கைகளால் அந்தப் பெண்ணின் வயிறு மற்றும் கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளார். அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டு ஓடி வர அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளம் பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.