வவுனியாவில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!!

599

போராட்டம்..

வவுனியாவிற்கு இன்று (19.11.2022) காலை வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாவட்ட செயலத்தில் அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல், வவுனியா நகரசபை மண்டபத்தில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஜனாதிபதி வருகைதந்த சமயத்தில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமையுடன் பல மணிநேரமாக இரு தரப்பினருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டிருந்தமையுடன் ஜனாதிபதி சென்றமையுடன் போராட்டம் நிறைவுற்றிருந்தது.