வவுனியாவில் நிலைமாற்றத்திற்கான பயணம் நாடக விழா : அனுமதி இலவசம்!!

594

நாடக விழா..

பால்நிலை பாரபட்சம்மிக்க சழூக நியமங்களும் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களில் அவற்றின் தாக்கமும் எனும் கருவை மையமாகக் கொண்டு ”நிலைமாற்றத்திற்கான பயணம் நாடக விழா” எனும் கருப்பொருளின் கீழ் நாடகங்கள் இடம்பெறவுள்ளன.

சட்டம் மற்றும் சழூக நம்பிக்கை நிறுவனம் அனுசரனையில் இடம்பெறும் நாடகங்களின் ஆற்றுகை வவுனியா நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

செம்முகம் ஆற்றுகைக்குழுவின் மனச்சிறை, சாப்பாட்டு மேசை ஆகிய நாடங்கள் அரங்கில் இடம்பெறவுள்ளன. இவற்றிக்கான அனுமதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன் மாணவர்கள் , பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு நாடகங்களின் ஆற்றுகையினை கண்டுகளிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.