3 பெண்களை மணந்து தனித்தனியே குடும்பம் நடத்திய கல்யாண மன்னன் : 3 மனைவிகளும் எடுத்த அதிரடி முடிவு!!

5822


தமிழகத்தில்..



தமிழகத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்து தனித்தனியே குடும்பம் நடத்தி வந்த கல்யாண மன்னன் மனைவிகளிடம் வசமாக சிக்கிய நிலையில் கணவரை மன்னித்து விட்டுள்ளனர்.



கோவையை சேர்ந்தவர் போசனகுமார் (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளம்பெண்ணின் அழகில் மயங்கிய போசன்குமார் அவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.




இந்நிலையில் போசனகுமார் பொள்ளாச்சியை சேர்ந்த தனது நண்பரின் தங்கையை காதலித்து 3வதாக திருமணம் செய்தார். ஒருவருக்கு ஒருவர் தெரியாமலேயே அவர்களுடன் தனியே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குடித்தனம் நடத்தி வந்தார்.

 


இந்நிலையில் தனது குடும்ப சொத்தை விற்றதில் கிடைத்த பங்கு ரூ.10 லட்சத்தை இரண்டாம் மனைவி போசனகுமாருக்கு கொடுத்துள்ளார். அதனை திருப்பி கேட்டபோது, போசனகுமார் அவரை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அவர் பொலிசில் புகார் செய்தார். விசாரணையின் போது போசனகுமார் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து தனித்தனியே குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது.


பின்னர் 3 மனைவிகளும் காவல் நிலையத்திற்கு வந்தனர். இதில் இரண்டாவது மனைவி மட்டும் தனது பணத்தை கொடுத்தால் பிரிந்து செல்வதாக கூறினார். இதையடுத்து அவருக்கு ரூ. ஒரு லட்சம் பணம் கொடுக்கப்பட்டது.

ஓரிரு நாளில் மீதி பணம் கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டது. மூன்றாவது மனைவி பொலிசாரிடம், போசனகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தனக்கு தெரியாது என்றும், அவரது முதல் மனைவி, குழந்தைகளுக்காக பிரிந்து செல்வதாகவும் கூறிவிட்டு சென்றார்.

முதல் மனைவியும் தனது கணவர் பல பெண்களுடன் வாழ்வது தனக்கு தெரியாது என கூறினார். போசனகுமாரிடம் குடும்பம் நடத்திய 3 பெண்களும் அவர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று கூறினர். இதனையடுத்து அவர்களிடம் பொலிசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.