காதலுக்கு எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்த காதல் ஜோடி!!

438

பிரேசில் நாட்டில் உயரமுள்ள பெண் தனது குள்ளமான காதலனை மணமுடிக்கவுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட எலிசானிடா குருஸ் என்ற பெண்ணும் 5 அடி அங்குல உயரம் கொண்ட பிரான்சினால்டோ சில்வா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவ்விருவருக்கும் இடையே 1 அடி அங்குல வித்தியாசமுள்ள நிலையில், இருவரும் ஒன்றாகவே சேர்ந்து சாலினோ நகரில் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து எலிசானிடா கூறுகையில், தனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கும் என நம்புவதாகவும், அப்படி குழந்தை பிறக்காத சூழ்நிலை உருவானால் குழந்தை ஒன்றை தத்தெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அவரது காதலனான பிரான்சினால்டோ சில்வா கூறுகையில், நான் எப்போதும் மிக உயரமான பெண்களுடனே வெளியே செல்ல விரும்புவேன், அப்படியிருக்கையில் எலிசானிடா எனக்கு கிடைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த ஜோடி திருமண உடைகள் தயார் செய்து திருமணத்திற்கு ரெடியாகி வருகின்றனர்.

11 12 13