படுத்த படுக்கையான தாய்… 2 வாரத்தில் திருமணம் நடைபெற இருந்தநிலையில் மகள் எடுத்த விபரீத முடிவு!!

377

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை அருகே, இதய அறுவைசிகிச்சைக்கு பின் படுத்த படுக்கையாய் அவதிப்பட்டு வந்த தாய் தற்கொலை செய்து கொண்டதால், மகளும் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி ஜோதிலட்சுமி, மகள்கள் வைஷ்ணவி, பவித்ரா மற்றும் பவானிசங்கர் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜோதிலட்சுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் படுத்த படுக்கையாய் ஆன ஜோதிலட்சுமியை அவரது மகள்கள் கவனித்து வந்துள்ளனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல படுக்கை புண்ணால் அவதிப்பட்டு வந்த ஜோதிலட்சுமி மிகுந்த கவலையில் இருந்து வந்துள்ளார். இந்த மனவேதனையில் அவர் எடுத்த விபரீத முடிவு குடும்பத்தின் நிலையை தலைகீழாக மாற்றியுள்ளது.

மூத்த மகளான வைஷ்ணவிக்கு ஆற்காடு வளவனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் 5ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.