வவுனியாவில் இருவேறு திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!

328

A6வவுனியாவில் இடம்பெற்ற இருவேறு திருட்டுச் சம்வம் தொடர்பில் கடந்த இரு தினங்களில் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு உள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..

அண்மையில் வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்து கூரிய ஆயுதங்களைக் காட்டி நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டிருந்தன. இத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியா மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதன.

இதேவேளை, பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் வீட்டு யன்னல் வழியாக இறங்கி அங்கிருந்த பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பூந்தோட்டம் பகுதி இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருட்டுப் போன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இம் மூன்று சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.