வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அண்மித்த பகுதியினை துப்புரவு செய்த மக்கள்!!

677

ஈச்சங்குளம்..

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ முகாமிற்கு அருகேயுள்ள காணியினை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் சிரமதானம் செய்கின்ற வேலைகள் நேற்று (23.11.2022) காலை ஆரம்பிக்கப்பட்டது.

காலை 10.30 மணியளவில் ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தினை அண்மித்த வளாகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் மக்கள் சிரமதானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.