ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை!!

485

train11

கம்பஹா ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 26 வயதான குறித்த இளைஞர் நேற்று இரவு 9.00 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர் யக்கல – பிடுவல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.