தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்..
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 12 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் ஏ.லோகேஸ்வரன் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 239 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 12 மாணவர்கள் 9ஏ சித்திகளை யும் 14 மாணவர்கள் 8ஏ சித்திகளை யும் 9 மாணவர்கள் 7ஏ சித்திகளையும் பெற்றுள்ளதுடன் 90 வீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.