வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

928

விபுலானந்தா கல்லூரியில்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.11.2022) மாலை வெளியான நிலையில், வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 10 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 10 மாணவர்கள் 9ஏ சித்திகளையும், 6 மாணவர்கள் 8ஏ வி சித்திகளையும்,4 மாணவர்கள் 7ஏ2வி சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.