மெஸ்ஸியை கார் ஏற்றி கொலை செய்து விடுவேன் – மெக்சிகோ குத்து சண்டை வீரர் மிரட்டல்..!!

232


மெக்சிகோ..



மெக்சிகோ குத்து சண்டை வீரர், மெஸ்ஸியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சம்பவம் உலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.




சமீபத்தில் லுசைல் மைதானத்தில் ‘சி’ பிரிவில், அர்ஜெண்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் நேருக்கு நேர் மோதின. போட்டி தொடங்கியதிலிருந்து பரபரப்பாக காணப்பட்டது.


இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது, திடீரென அர்ஜென்டிணா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அபாரமாக அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.


இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக 2-வது கோலை அடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து, அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு பிறகு உடைமாற்றும் அறையில் வீரர்கள் பாட்டு பாடி, நடனம் ஆடி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். அப்போது, மெஸ்ஸி செய்த காரியம் மெக்சிகோவின் குத்து சண்டை வீரர் கேனலோ ஆல்வாரெஜ்ஜுக்கு ஆத்திரம் கிளப்பி இருக்கிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நமது ஜெர்சியை பயன்படுத்தி மெஸ்ஸி தரையை துடைத்திருக்கிறார். இதனை பார்த்தீர்களா நண்பர்களே? மெஸ்ஸியை நான் எங்கேயாவது பார்த்தேன் என்றால், அவரை வாகனம் ஏற்றி கொலை விடவேண்டாம் என்று அவர் கடவுளிடம் வேண்டி கொள்ளட்டும்.

மெஸ்சியின் அந்தஸ்துக்கு அவர், மெக்சிகோவின் கொடி மற்றும் சட்டையை மதிக்க வேண்டும். அர்ஜென்டினாவை நான் மதிப்பதுபோல், மெக்சிகோவை அவர் மதிக்க வேண்டும் என்று மிரட்டலாக பதிவிட்டுள்ளார்.