பணம், ஆடம்பரம் வேண்டாம்… அனைத்தையும் துறந்த 22 வயதான பணக்காரப் பெண்ணின் கதை!!

340

இந்தியாவில்..

புதுச்சேரியை சேர்ந்தவர் சாந்திலால் ஜெயின். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். இளைய மகள் சலோனி ஜெயின் (22). பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

இவர் துறவியாக மாற முடிவு செய்து, தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சலோனி முடிவிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

வரும் 4ம் திகதி பெங்களூருவில் உள்ள பாஸ்வசுசீல்தார் கோயிலில், குருஜி ஆச்சார்ய அரவிந்த் சாகர் சுவசர் மகாராஜ் முன்னிலையில், சலோனி துறவறத்திற்கான தீட்சை பெற உள்ளார்.

இந்நிலையில் சலோனி துறவறம் செல்வதை கொண்டாடும் வகையில், மேள தாளங்கள் முழங்க குதிரை பூட்டிய சாரட் வண்டியில், ஜெயின் சமூகத்தினர் அவரை ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சலோனி கூறுகையில், டான்ஸ் கோரியோகிராபர் ஆக வேண்டும் என்பது எனது கனவு. சமீபத்தில், நான் 50 நாட்கள் நடந்த சாது ஜீவன் முகாமில் கலந்து கொண்டேன். அப்போது, சாமியார் எப்படி வாழ்வார்களோ அந்த வாழ்வை மேற்கொண்டேன்.

அதிலிருந்து, ஆத்ம நிலையை அடைய முடிவு செய்து, எந்தவித ஆசைகளுக்கும் இடமின்றி, துறவறம் மேற்கொண்டு, இறைவனின் ஆசியை பெற தீர்மானித்தேன் என கூறியுள்ளார்.