சென்னையில் நடக்கவிருந்த 4 ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்!!

243

Chennai

சென்னையில் நடைபெறவிருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிக்கை வருமாறு..

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 18ம் திகதி சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகள் மோதவிருந்தன.

22ம் திகதி சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதுதவிர மே 27 மற்றும் 28ல் அரையிறுதி போட்டிகளும் இங்கு நடைபெறுகின்றன. இந்த 4 போட்டிகளும் ராஞ்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சேப்பாக்கம் மைதானத்தின் கலரிகள் திறப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.