விபத்தில் பரிதாபமாக பலியான குடும்பப் பெண்!!

965

கீதாஞ்சனா தேவி..

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி , கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று (30.11.2022) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளளார்.

அத்துடன், இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. அதேவேளை அண்மையில் வெளியான கா.பொ.த சாதாரணத பரீட்சையில் உயிர்ழந்தவரின் மகள் 9A பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.