வவுனியாவில் வயோதிபரை மோதிய மோட்டார் சைக்கிள் : விபத்து நடந்த இடத்தில் பதற்றநிலை!!

1133

விபத்து..

வவுனியா குருமன்காடு பகுதியில் இன்று (30.11.2022) இரவு 8.30 மணியளவில் பாதையினை மாற முற்பட்ட வயோதிபரை வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் குருமன்காடு பகுதியிலிருந்து காளிகோவில் வீதிக்கு மாறமுற்பட்ட வயோதிபர் மீது வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக சென்ற அதிக செயல்திறனுடைய இரு மோட்டார் சைக்கில்கள் குறித்த வயோதிபரின் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது . இவ் விபத்தில் வயோதிபர் காயங்களுக்குள்ளாகியிருந்தார்.

குறித்த இரு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்துடன் பயணித்தாகவும் அவர்களின் வேகமே இவ் விபத்துக்கு காரணம் என தெரிவித்து விபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்களினால் பதற்றநிலை காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் இரு மோட்டார் சைக்கிள்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.