இளைஞனை கொலை செய்து தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூரர்கள் : காதலால் வந்த வினை!!

716

சிவகங்கையில்..

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 27 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்ட நிலையில் தலையை வெட்டி எடுத்துச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செந்திவேல் மகன் ராமு.

27 வயதான இவர் நேற்று மாலை முதல் மாயமாகியுள்ளார். அக்கம், பக்கத்தில் அவரை தேடியும் கிடைக்காத நிலையில், இன்று காலை அருகில் உள்ள கண்மாய் கரையில் அடையாளம் தெரியாத இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தேடப்பட்டு வந்த ராமு என்பது தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதியில் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரது தலையை வெட்டி எடுத்து சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொலைக்கான காரணமும் இதுவரை தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட ராமு மீது எந்த வழக்கும் கிடையாது. உள்ளூரில் சிறு சிறு சண்டைகள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார். இவ்வளவு கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு பகை ஏதும் இருந்ததாக தெரியவில்லை.

ராமநாதபுர சரக டிஐஜி மயில்வாகனன். சிவகங்கை எஸ்பி செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரித்தனர். ராமுவின் டூவீலர் , அலைபேசி உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பின் ராமுவின் தலையை அருகில் உள்ள கண்மாயில் பாழடைந்த கிணற்றில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். கொலை செய்யப்பட்ட ராமுவின் அத்தை மகளை அதே ஊரைச் சேர்ந்த பிரபாகரன் காதலித்து வந்துள்ளார்.

இதனை ராமு தட்டி கேட்டதுடன் கண்டித்துள்ளார். நேற்று இரவு பிரபாகரன், அவரது நண்பர் பாலமுருகன் ஆகியோர் ராமுவிடம் சமாதானம் பேசலாம் என அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். மானாமதுரை போலீசார் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.