மலேசிய விமானத்தை கடத்தியது வேற்றுகிரகவாசிகளா?

270

Malaysian

மாயமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியதாக கருத்துகணிப்பு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 8ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற MH370 விமானம் மர்மமான முறையில் மாயமானது.

இந்திய பெருங்கடலில் விமானம் விழுந்ததாக கிடைத்த தகவலின் பேரில் சர்வதேச நாடுகள் சுமார் 2 மாதகாலமாக தேடுதல் வேட்டை நடத்தியும், இதுவரை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் விமானம் எவ்வாறு மாயமாகி இருக்கும் என்பது குறித்து, அமெரிக்காவில் ”சிஎனென் ஓஆர்சி” நிறுவனங்கள் பொதுமக்களிடம் நடத்திய கருத்துகணிப்பில் சில அதிர்ச்சிகரமான முடிவுகளும் கூறப்பட்டுள்ளன.

இதில் கலந்து கொண்ட பத்தில் ஒருவர், விமானம் மாயமானதற்கு வேற்றுகிரகவாசிகள் தான் காரணம் என பதிலளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஒரு தரப்பில் மக்களால் மாயமான விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்றும் வேறு சிலர் விமானம் கடலில் விழுந்திருப்பதாக தாங்கள் நம்பமுடியாததால் விமானத்தை விமானிகளே கடத்தியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் 79 சதவீத அமெரிக்கர்கள் விமானத்தில் உள்ளவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லாதாகவும், 9 சதவீதம் பேர் விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தி இருக்கலாம் என தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.