பேஸ்புக்கில் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தால் 40 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞன்!!

349

விஜயப்பூரில்..

கர்நாடக மாநிலம் விஜயப்பூர் மாவட்டம், சிந்தகி தாலுகாவில் உள்ள பாகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர் ஏமார்ந்ததை போல யாரும் யாரும் ஏமார்த்திருக்க முடியாது.

ஹைதராபாத்தில் நடந்து வரும் கட்டட பிராஜக்ட் ஒன்றில் சூப்பர்வைசராக பரசுராமன் பணியாற்றி வருகிறார். அவருக்கு மாதம் 30,000 சம்பளம். இந்த நிலையில் முகநூலில் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை டிபி- யாக வைத்திருந்த பெண் ஒருவர் பரசுராமுக்கு பிரண்ட் ரெக்கியூஸ்ட் அனுப்பியுள்ளார்.

கீர்த்தி சுரேஷை யாரென்றே தெரியாத பரசுராம் அந்த புகைப்படத்தை பார்த்து வியந்து போனார். பின்னர் அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பேசி வந்துள்ளார்.

அந்த பெண் கல்லூரியில் படிப்பதாக கூறி, படிப்பு செலவுக்காக அவ்வப்போது பரசுராமனிடம் பண உதவி கேட்டு பெற்றுள்ளார். இவ்வாறு சுமார் 40 லட்சம் வரை அந்த பெண்ணுக்கு பரசுராம் செலவழித்துள்ளார்.

ஒருநாள் பரசுராமனிடம் வீடியோ காலில் பேசலாம் என அழைத்த பெண் அவரது முகத்தை காட்டாமல் பரசுராமனை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

பரசுராமனும் குளிக்கும்போது வீடியோ கால் செய்துள்ளார். அதை தனது செல்போனில் ரெக்கார்டு செய்துகொண்ட அந்த பெண் பரசுமானை மிரட்ட தொடங்கினார். பல லட்ச ரூபாய் வரை கொடுத்த பிறகும் பெண்ணின் மிரட்டல் ஓயவில்லை.

இதனால் பரசுராமன் சிந்தகி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். உடனே சைபர் க்ரைம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மோசடி பெண்ணை தேடி வந்தனர்.

விசாரணையில் அந்த பெண் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா என்பதும் அவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.

கல்லூரி மாணவி என்று தன்னிடம் மோசடி செய்ததோடு நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படம் தன்னுடையதுதான் என்று சொல்லி காதல் வலையில் வீழ்த்தியது பரசுராமனுக்கு பேரிடியாக இருந்தது.

பின்னர் மஞ்சுளாவை கைது செய்த போலீசார் பரசுராமனை மிரட்டி வாங்கியிருந்த லட்ச கணக்கான பணம், ஒரு ஹூண்டாய் கார், பைக், 100 சவரன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பரசுராமனை மிரட்டி வாங்கிய பணத்தில், மஞ்சுளா புதிய வீட்டையும் கட்டி வருவதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், மஞ்சுளாவை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த கணவனையும் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஏமார்ந்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிகொடுத்து வந்த நபரின் அறியாமல் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.